உள்ளூர் செய்திகள்
- மேலூர் அருகே இளம்பெண் ஒருவர் மீன்பண்ணை குட்டையில் பிணமாக மிதந்தார்.
- அவர் கடத்திக்கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு போலீஸ் சரகத்திற்குட்பட்ட பஞ்ச பாண்டவர் மலைப்பகுதியைச் சேர்ந்த வர் ஜெயபிரகாஷ். இவர் மலையடிவாரத்தில் மீன்பண்ணை நடத்தி வருகிறார்.
இன்று காலை மீன்பண்ணையில் உள்ள குட்டையில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் மிதந்தது. இதைப்பார்த்த அந்தப்பகுதியினர் உடனே கீழவளவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தண்ணீரில் மிதந்த இளம்பெ ண்ணின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலில் காயம் இருந்ததாக தெரிகிறது.
பிணமாக மிதந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? பெண்ணை கடத்திக்கொலை செய்து இங்கு வீசிவிட்டுச் சென்றார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.