உள்ளூர் செய்திகள்

சோழவந்தான் பகுதியில் மகா சிவராத்திரி வழிபாடு

Published On 2023-02-19 12:53 IST   |   Update On 2023-02-19 12:53:00 IST
  • சோழவந்தான் பகுதியில் மகா சிவராத்திரி விழா வழிபாடு நடந்தது.
  • இந்த நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

சோழவந்தான்

மதுரை மாவட்டம் சோழவந்தான் சப்பாணி கோவில் தெருவில் உள்ள சப்பாணி கோவிலில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மகா சிவராத்திரி விழா நடந்தது. இதனை முன்னிட்டு பக்தர்கள் முதல் வாரம் காப்பு கட்டி, விரதம் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் மகாசிவ ராத்திரி அன்று வைகை ஆற்றுக்கு சென்று சாமி பெட்டியுடன் கரகம் எடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது. வைத்தியநாதபுரம் அம்மன் கோவிலில் நடந்த விழாவில் பக்தர்கள் வயல்காட்டுக்கு சென்று சாமி பெட்டி எடுத்து கரகம் எடுத்து முளைப்பாரி ஊர்வலம் எடுத்து வந்தனர்.

புட்டு விநாயகர் கோவிலில் 4 கால அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. திரவுபதி அம்மன் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷே கம் நடைபெற்றது. இங்குள்ள கருப்பசாமிக்கு 12 வாசனை பொருட்களை கொண்டு அபிஷே கம், சிறப்பு பூஜை கள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பிரளய நாத சுவாமி கோவிலிலும் 4 கால பூஜை நடைபெற்றது. இதில் எம்.வி.எம். குழுமத்தலைவர் மணிமுத்தையா, நிர்வாகி வள்ளியம்மாள், தாளாளர் டாக்டர் மருதுபாண்டியன் ஆகியோர் பங்கேற்று பக்தர்களுக்கு பிரசாதப்பை வழங்கினர்.

மேலரதவீதி அங்காள பரமேஸ்வரி சமேத வாலகுரு நாதன் கோவில், வைகை ஆற்றங்கரையில் உள்ள சாலை கருப்பண்ணசாமி கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் திருவேடகம் ஏடகநாதர் கோவில், தென்கரை அகிலாண்ட ஈஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோவில், முதலைக் குளம் கம்ப காமாட்சி அம்மன் கருப்புசாமி கோவில், விக்கிரமங்கலம் கருப்பு கோவில், காடுபட்டி கோவில் வயக்காட்டு கருப்புசாமி கோவில், மன்னாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Tags:    

Similar News