உள்ளூர் செய்திகள்
கபடி போட்டி; எம்.எல்.ஏ. பரிசு வழங்கினார்
- திருவாலவாயநல்லூரில் கபடி போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வெங்கடேசன் எம்.எல்.ஏ. பரிசுகளை வழங்கினார்.
- இதில் 85 அணிகள் கலந்து கொண்டன.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே உள்ள திருவாலவாயநல்லூர் ஊராட்சியில் அருண் மற்றும் சாலினி நினைவு கபடி குழு இணைந்து கபடி போட்டியை நடத்தியது. 85 அணிகள் கலந்து கொண்டன. சோழவந்தான் வெங்கடேசன் எம்.எல்.ஏ. போட்டிகளை தொடங்கி வைத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
முதல் பரிசை குருவித்துறை வல்லவன் பார்ட்னர்ஸ் அணியும், 2-வது பரிசை காடுபட்டி அணியும், 3-வது பரிசை செல்லூர் அணியும், 4-வது பரிசை பேட்டை கிராம அணியும் பெற்றது. பரிசுகளை ஊராட்சி மன்ற செயலாளர் சகுபர்சாதிக், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் சேகர், முத்தையா, பாசறை மற்றும் ஜே.பி.கிளப் உள்ளிட்டோர் இணைந்து வழங்கினார். முன்னதாக போட்டிகளை சோழவந்தான் காவல் ஆய்வாளர் சிவபாலன் தொடங்கி வைத்தார்.
தி.மு.க. ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன், சித்தாலங்குடி ஒன்றிய கவுன்சிலர் தனபால் முன்னிலை வகித்தனர்.