உள்ளூர் செய்திகள்
காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர தினவிழா
- காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
- இதில் வடக்கு மாவட்ட துணை தலைவர் கருப்பாயூரணி வேலு ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
மதுரை
காங்கிரஸ் கட்சியின் மதுரை வடக்கு மாவட்ட தலைவர் ஆலாத்தூர் ரவி உத்தரவின்பேரில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. ஒத்தக்கடை வட்டார தலைவர் சவுந்தரபாண்டியன் ஏற்பாட்டில் ஒத்தக்கடை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேசியகொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் வடக்கு மாவட்ட துணை தலைவர் கருப்பாயூரணி வேலு ஆறுமுகம் தலைமை தாங்கினார். கிராம கமிட்டி தலைவர் ஜெயராஜ் பாண்டியன், வெள்ளையன், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலைச்செல்வன், மாயாண்டி முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் நாகேந்திரன், முகமது அலி, சாகுல் அமீது, பாஸ்கரன், யோகேஸ் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.