உள்ளூர் செய்திகள்
- மேலூர் அருகே குடும்ப தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
- கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டது.
மேலூர்
மேலூர் அருகே உள்ள திருவாதவூரை சேர்ந்தவர் ரமேஷ்(வயது44). இவரது மனைவி ஜெயலட்சுமி(40). இருவருக்கும் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு முகேஷ் மற்றும் சந்தோஷ் ஆகிய மகன்கள் உள்ளனர்.
கணவன்-மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு இருந்தது. நேற்று மதியம் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதன் பின்னர் ரமேஷ் வெளியே சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டுக்குள் ஜெயலட்சுமி தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடந்தார்.
இது குறித்து மேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. ஆர்லியஸ் ரெபோனி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜெயலட்சுமியின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.