உள்ளூர் செய்திகள்

முதியவர் தற்கொலை

Published On 2023-05-25 08:10 GMT   |   Update On 2023-05-25 08:10 GMT
  • திருமங்கலம் அருகே முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
  • கடந்த சில மாதங்களாக உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.

திருமங்கலம்

திருமங்கலம் அருகேயுள்ள ஈச்சம்பட்டியை சேர்ந்தவர் கல்யாணி(75). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால் விரக்தியடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கல்யாணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கல்யாணியின் மகன் தங்கப்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் சிந்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News