உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி பரிதாப சாவு

Published On 2023-01-19 08:02 GMT   |   Update On 2023-01-19 08:02 GMT
  • மதுரை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
  • கப்பலூர், தோப்பூர் ஆகிய பகுதி களில் உள்ள நான்கு வழி் சாலைகளில் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி அருகே உள்ள தனக்கன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 53). தொழி லாளியான இவர் நேற்று இரவு மோட்டர் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார்.

தனக்கன்குளம் 4 வழிச்சாலையை கடக்க முற்பட்டபோது அந்த வழியாக வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கணேசன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் கணேசன் மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த அருப்புக்கோட்டையை சேர்ந்த பிரதீப் (23) ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த 2 பேரையும் அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக இறந்தார். பிரதீப்புக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமங்கலம், ஆஸ்டின் பட்டி, தனக்கன்குளம், கப்பலூர், தோப்பூர் ஆகிய பகுதி களில் உள்ள நான்கு வழி் சாலைகளில் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இதனால் உயிர் பலியும் ஏற்படுகிறது எனவே போலீசார் உரிய கவனம் செலுத்தி மேற்கண்ட பகுதிகளில் விபத்து நடைபெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News