உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவர், பெண்ணிடம் வழிப்பறி

Published On 2023-08-04 08:36 GMT   |   Update On 2023-08-04 08:36 GMT
  • கல்லூரி மாணவர், பெண்ணிடம் வழிப்பறி செய்தனர்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

கன்னியாகுமரி மாவட்டம் பளப்பள்ளம் ஏ.அரசுவிளையை சேர்ந்தவர் சுந்தரேஷ். இவரது மகன் அஸ்வின் (19). இவர் மதுரையில் நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கே.கே.நகர் வாக்கர்ஸ் கிளப் பகுதியில் இவர் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் அஸ்வினை வழிமறித்து அவசரமாக போனில் பேச வேண்டும் என கூறி அஸ்வினிடம் செல்போனை வாங்கினர். பின்னர் செல்போன் பேசுவது போல நடித்த அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதுகுறித்து மாட்டுத்தாவணி போலீசில் அஸ்வின் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கே.புதூர் சம்பக்குளம் ஸ்ரீராம் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் யோகேஷ். இவரது மனைவி அம்ரிதா (30). இவர் தனது ஸ்கூட்டரில் குழந்தையை பள்ளிக்கு அழைத்துச்சென்றார். அங்கு குழந்தையை இறக்கிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென அம்ரிதா அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து கே.புதூர் போலீஸ் நிலையத்தில் அம்ரிதா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News