உள்ளூர் செய்திகள்

தென்னை சாகுபடி விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் கொள்முதல் செய்யலாம்

Published On 2023-03-10 07:44 GMT   |   Update On 2023-03-10 07:44 GMT
  • தென்னை சாகுபடி விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் கொள்முதல் செய்யலாம்.
  • மேலூர் பகுதி விவசாயிகள் 96290 79588 என்ற எண்ணிலும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர்களை தொடர்பு கொள்ளலாம்.

மதுரை

மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மற்றும் மேலூர் பகுதிகளில் தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் அரவைக் கொப்பரை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரத்து 860 என்ற குறைந்தபட்ச ஆதார விலை அடிப்படையில் விலை ஆதார திட்டத்தின் கீழ் வருகிற ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் வாடிப்பட்டி மற்றும் மேலூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்கள் மூலமாக கொள்முதல் செய்ய அரசு உத்தர விட்டுள்ளது.

இந்த பகுதிகளில் தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்களது நிலத்தில் சாகுப்பு செய்தமைக்கான அசல் சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் நக லுடன் வாடிப்பட்டி மற்றும் மேலூர் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் இப்பொதே பதிவு செய்யலாம்.

பதிவு செய்த விவசாயி களிடம் இருந்து மட்டுமே அரவைக் கொப்பரை கொள்முதல் செய்யப்படும். விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட உள்ள அரவைக் கொப்ப ரையில் அயல் பொருட்கள் 1 சதவீதத்திற்கு குறைவா கவும், பூஞ்சாணம் மற்றும் கருமை நிறம் கொண்ட கொப்பரை 10 சதவீதத்திற்கு குறைவாகவும் சுருக்கம் கொண்ட கொப்பரைகள் மற்றும் சில்லுகள் 10 சதவீ தத்திற்கு குறைவாகவும், ஈரப்பதமானது 6 சதவீ தத்திற்கு குறைவா கவும்இருக்க வேண்டும்.

ஆய்வகத் தரப்பரி சோதனை செய்து மேற்கண்ட நியாயமான சராசரி தரத்தின்படி உள்ள அரவைக் கொப்பரை மட்டுமே கொள்முதல் செய்யப்படும். கொள்முதல் செய்யப்பட்ட அரவைக் கொப்பரைக்கான தொகை விவசாயியின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் கொள்முதல் பணியை செய்ய அரசு உத்தரவு பெறப்பட்டுள்ளதால், வாடிப்பட்டி மற்றும் மேலூர் பகுதி விவசாயிகள் விரைவாக செயல்பட்டு பயன்பெறலாம்.

மேற்கண்ட பொருள் தொடர்பாக வாடிப்பட்டி பகுதி விவசாயிகள் 87789 81501 என்ற எண்ணிலும், மேலூர் பகுதி விவசாயிகள் 96290 79588 என்ற எண்ணிலும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர்களை தொடர்பு கொள்ளலாம்.

மேலும், விவசாயிகள் தங்களது வட்டார விற்ப னைத்துறை உதவி வேளாண் அலுவலர்களிடமும், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவ லத்திலும் தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை பெற்று பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News