உள்ளூர் செய்திகள்

சோழவந்தான் அருகே முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம்

Published On 2023-08-25 08:24 GMT   |   Update On 2023-08-25 08:24 GMT
  • முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை வெங்கடேசன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.
  • தலைமை ஆசிரியர் பூங்கொடி வரவேற்றார்.

சோழவந்தான்

சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் காலை உணவு திட்ட தொடக்க விழா நடந்தது. வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டார். ஊராட்சி ஒன்றிய ஆணையர் கதிரவன் முன்னிலை வகித்தார்

ஊராட்சி மன்ற தலைவர் பவுன் முருகன், ஒன்றிய கவுன்சிலர் ரேகா வீரபாண்டி, துணத்தலைவர் பாக்கியம் செல்வம், முன்னாள் தலைவர் ஆறுமுகம் கணேசன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர். தலைமை ஆசிரியர் பூங்கொடி வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர்கள் பசும்பொன், மாறன், கார்த்திகா, ஞான சேகரன், வக்கீல் முருகன், மணிவேல், கேபிள் ராஜா, மனோகரன் ஆகியோர் பேசினர்.

இதில் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன், கவுன்சிலர் சத்திய பிரகாஷ், வெற்றிச்செல்வன், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன், ஊராட்சி செயலாளர் திருசெந்தில், ஊத்துக்குளி ராஜாராமன், செல்வமணி, தமிழ்மணி, முருகேசன் உள்பட ஆசிரியர் ஆசிரியைகள் பெற்றோர்கள் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News