உள்ளூர் செய்திகள்

ரோட்டரி சார்பில் கல்வி ஆய்வு மையம்

Published On 2023-04-24 14:06 IST   |   Update On 2023-04-24 14:06:00 IST
  • மதுரையில் ரோட்டரி சார்பில் கல்வி ஆய்வு மையம் கட்டப்பட்டுள்ளது.
  • ஊராட்சி தலைவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரை

ரோட்டரி கிளப் ஆப் மதுரை மெட்ரோ ஹெரி டேஜ் மூலம், திருமால் புரத்தில் 1,700 சதுர அடி பரப்பளவில் கல்வி ஆய்வு மையம் கட்டப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார். அவர் பேசுகையில், இந்த மையம் பல அரசு அதிகாரிகளை உருவாக்கும். வசதி குறைந்தவர்களுக்கு சம வாய்ப்புகளை உருவாக்கும் என்றார்.

ரோட்டரி கிளப் ஆப் மதுரை மெட்ரோ ஹெரிடேஜ் தலைவர் வெங்கடேஷ் பேசுகையில், திருமால்புரம் ஆர்.சி.சி மையத்தில் டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி, இளந்தளிர் - கிராமப்புற பள்ளிகளுக்கான கலாச்சார நிகழ்ச்சி, மருத்துவ முகாம்கள், கிராமப்புற மாணவர்களுக்கு 12-ம் வகுப்பு வரை இலவச பயிற்சி ஆகியவை வழங்கப்படும் என்றார்.

இதில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் ராஜா கோவிந்தசாமி, செயலாளர் அல்லிராணி பாலாஜி, மாவட்ட ரோட்டரி கல்வி மையம் பூங்கோதி மலை வீரன், செட்டிகுளம் ஊராட்சி தலைவர் மற்றும் ரவி பார்த்தசாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News