உள்ளூர் செய்திகள்

யோகா தின கொண்டாட்டம்

Published On 2023-06-23 08:35 GMT   |   Update On 2023-06-23 08:35 GMT
  • நாடார் வித்தியாசாலை பள்ளியில் யோகா தின கொண்டாட்டப்பட்டது.
  • தலைமை ஆசிரியர் காந்திபாய் சுவாமியடியான் நன்றி கூறினார்.

மதுரை

மதுரை தெற்கு வாசல் நாடார் வித்தியாசாலை பள்ளியில் உலக யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. விருதுநகர் நகராட்சி முன்னாள் தலைவர் கார்த்திகா கரிக்கோல்ராஜ் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் அவரது குழுவினர் மாணவ-மாணவிகளுக்கு பிராணிக் ஹீலிங் யோகா பயிற்சி அளித்தனர்.

இதில் 700 மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளி தலைவர் பார்த்திபன், உறவின்முறை துணை செயலாளர் அருஞ்சுணை ராஜன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தலைமை ஆசிரியர் காந்திபாய் சுவாமியடியான் நன்றி கூறினார்.

Tags:    

Similar News