- சமுதாயக்கூடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
- மேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபாலன் மற்றும் அம்பலகாரர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
மேலூர்
மேலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பதினெட்டாங்குடி ஊராட்சியில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவிலில் சட்டமன்றஉறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டும் பணியினை பெரியபுள்ளான் எம்.எல்.ஏ.,முன்னாள் எம்எல்ஏ தமிழரசன் ஆகியோர் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுச்சாமி, கொட்டாம்பட்டி முன்னாள் யூனியன் சேர்மன் வெற்றிச்செழியன், மேலூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பொன் ராஜேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், பதினெட்டாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் சுதா ஆண்டி, துணைத்தலைவர் முத்துகிருஷ்ணன், திருவாதவூர் ஊராட்சி மன்ற தலைவர் இளவரசன், கிடாரிப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், மேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபாலன் மற்றும் அம்பலகாரர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.