உள்ளூர் செய்திகள்

அருள் ஆனந்தர் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முதல்வர் அன்பரசு பேசிய காட்சி.

வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2023-07-17 09:37 GMT   |   Update On 2023-07-17 09:37 GMT
  • அருள் ஆனந்தர் கல்லூரியில் வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
  • பயிற்சி வகுப்பின் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.

மதுரை

மதுரை அருகே உள்ள கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியின் தொழில் வழி–காட்டல் மற்றும் வேலை வாய்ப்புக் குழு சார்பில் தொழில் வழிகாட்டுதல் மற்றும் வேலை வாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. முதல்வர் அன்பரசு வரவேற்றார். செயலாளர் அந்தோணிசாமி, துணை முதல்வர் சுந்தரராஜ் சிறப்புரையாற்றினர்.

மதுரை மண்டல வேலை–வாய்ப்பு மற்றும் பயிற்சி மண்டல இணை இயக்குநர் தேவேந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, அரசுத் துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்து–ரைத்தார். தொடர்ந்து, மதுரை மாவட்ட வேலை–வாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டி மையத்தின் துணை இயக்குனர் சண்முக சுந்தர், குடிமைப்பணி தேர் வுகள் குறித்து விளக்கி–னார்.

மதுரை மாவட்ட வேலை–வாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டல் மையம் நடத் தும் இலவச பயிற்சி வகுப்பின் அறிவுரையாளர் மலைச்சாமி பயிற்சி வகுப்பின் அவசியம் குறித்து வலியுறுத்தினார். சிறார் நீதி வாரிய உறுப்பினர் பாண்டி–யராஜன் மாணவர்களை ஊக்கப்படுத்தினார். முடி–வில் அருள் ஆனந்தர் கல்லூரியின் தொழில் வழிகாட்டல் மற்றும் வேலை வாய்ப்புக் குழு துணை தலைவர் சங்கரநாராயணன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News