உள்ளூர் செய்திகள்

வன அதிகாரி மீது தாக்குதல்

Published On 2023-05-11 08:31 GMT   |   Update On 2023-05-11 08:31 GMT
  • வன அதிகாரியை தாக்கினர்.
  • புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரியபுத்திரனை கைது செய்தனர்.

மதுரை

மதுரை புதூர் கற்பகம் நகரை சேர்ந்தவர் வெற்றிவேல்(வயது65), ஓய்வு பெற்ற வன அதிகாரி. சம்பவத்தன்று இவரது வீட்டு வாசல் முன்பு கே.கே.நகரை சேர்ந்த அரியபுத்திரன் என்பவர் தனது காரை நிறுத்தியிருந்தார். காரை வேறு பகுதியில் நிறுத்துமாறு வெற்றிவேல் கூறினார். இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அரியபுத்திரன், வெற்றிவேலை தாக்கினார். இதுகுறித்த புகாரின் பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரியபுத்திரனை கைது செய்தனர்.

மதுரை ஜீவா நகரை சேர்ந்தவர் ராஜா(வயது44). இவர் சம்பவத்தன்று பழங்காநத்தம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவரை வழிமறித்த 4 பேர் கத்தியை காட்டி மிரட்டி செல்போன், ரூ.3 ஆயிரத்தை பறித்துச் சென்றனர். இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், வழிப்பறியில் ஈடுபட்டது ஜீவா நகரை சேர்ந்த விக்னேஷ்(24), பழங்காநத்தம் தினேஷ்குமார்(25), தினேஷ்வரன்(30), அஜய்குமார்(19) என தெரியவந்தது. 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News