உள்ளூர் செய்திகள்
- வாடிப்பட்டி அருகே அன்னதானம்- மருத்துவ முகாம் நடந்தது.
- அன்னதானத்தை விவசாய விஞ்ஞானி ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.
வாடிப்பட்டி
ஆடி 18-ம் பெருக்கை முன்னிட்டு வாடிப்பட்டி அருகே உள்ள சாணாம்பட்டியில் பதினென்சித்தர்பீடத்தில் சித்தர்களுக்கு சிறப்புபூஜையும், அன்ன தானம், மருத்துவமுகாமும் நடந்தது. பதினெ ன்சித்தர்களுக்கு தமிழ்முறைப்படி யாக சாலைபூஜைசெய்து சிறப்புஅபிஷேக, ஆராதனை, அர்ச்சனை நடந்தது.
யாகசாலைபூஜையை சித்தர்பீட நிறுவனத்தலைவர் விஜயபாஸ்கர் செய்தார். அன்னதானத்தை விவசாய விஞ்ஞானி ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். ஜெயராமன் முன்னிலை வகித்தார். இரும்பாடி ராஜேந்திரன் வரவேற்றார். டாக்டர் திருவையாறு ரகு கருத்துரை வழங்கினார். மருத்துவ முகாமில் சித்தா, அக்குபஞ்சர், வர்மா, இயற்கை மருத்துவமுறையில் மருத்துவர்கள் லிங்குசெல்வி, செல்லத்தாய், ஜோதிமுனீஸ் ஆகியோர் இலவச சிகிச்சை மற்றும் ஆலோசனை, மருந்து, மாத்திரைகள் 300 பேருக்கு வழங்கினர்.