உள்ளூர் செய்திகள்
சைக்கிள் ஓட்டிச் சென்ற முதியவர் தவறி விழுந்து பலி
- சைக்கிள் ஓட்டிச் சென்ற முதியவர் தவறி விழுந்து பலியானார்.
- சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மதுரை
வண்டியூர் சி.எம்.நகர் யமுனா நதி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது75). இவர் சவுராஷ்டிராபுரம் பகுதியில் சைக்கிளை ஓட்டிச்சென்றார். அப்போது திடீரென்று தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து மனைவி வில்லம்மாள் கொடுத்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.