உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டில் ராணுவ சிப்பாய்களாக பங்கேற்போம்: ஆர்.பி.உதயகுமார்

Published On 2023-08-19 08:44 GMT   |   Update On 2023-08-19 08:44 GMT
  • எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டில் ராணுவ சிப்பாய்களாக பங்கேற்போம் என ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
  • இரும்பு மனிதர் எடப்பாடியாரின் தரத்தை வலுப்படுத்திட அன்புடன் வேண்டுகிறேன்.

மதுரை

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செய லாளர் சட்டமன்ற எதிர்க் கட்சித் துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர்

ஆர். பி. உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது-

கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி யாரின் சீரிய தலைமையில் மதுரை மாநகரில் அ.தி.மு.க. வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு வெகு விமரிசையாக நாளை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கழகப் பொதுச் செயலாளர், வருங்கால முதலமைச்சர் எடப்பாடியார் தலைமை தாங்கி மாநாட்டை தொ டங்கி வைத்து மாநாட்டில் வீர உரையாற்றுகிறார்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க எழுச்சி மாநாட்டில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றியம், பேரூர், நகரம் கிளைக் கழக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் உள்ளாட்சி கூட்டுறவு பிரதிநிதிகள் அனைவரும் குடும்பம் குடும்பமாக பங்கேற்று தமிழகத்தின் இரும்பு மனிதர் எடப்பாடியாரின் தரத்தை வலுப்படுத்திட அன்புடன் வேண்டுகிறேன். மாநாட்டில் கழகத் தொண்டர்களும் புரட்சித்தலைவி அம்மா பேரவை நிர்வாகிகளும் ராணுவ கட்டுப் பாடுடன் ராணுவ சிப்பாய்களாக பணியாற்றி சிறப்பித்திட அன்புடன் வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News