உள்ளூர் செய்திகள்

முன்விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு

Published On 2023-11-15 08:04 GMT   |   Update On 2023-11-15 08:04 GMT
  • முன்விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் வெங்க டேச பெருமாளை கைது செய்தனர்.

மதுரை

மதுரை சிம்மக்கல் அபிமன்யூ தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன் (42). சிம்மக்கல் எம்.சி.தெருவை சேர்ந்தவர் மகா லிங்கம் மகன் வெங்கடேச பெருமாள் (21). இவர் 10 நாட்களுக்குமுன்பு சிகரெட்பற்றவைக்க வேல்முருகனிடம் தீப்பெட்டி கேட்டுள்ளார். அதற்கு தீப்பெட்டி கேட்க வயது வித்தியாசம் வேண்டாமா? வயதில் மூத்தவனான என்னிடமா கேட்கிறாய்? என்று வெங்கடேச பெருமாளை கண்டித்துள்ளார். அதில் தகராறு ஏற்பட்டு வேல்முருகனை வெங்கடேசபெருமாள் பிடித்து கீழே தள்ளியுள்ளார்.

இந்த சம்பவத்தைப் பார்த்த அவர் மகன் அருண்குமார் ஓடிவந்து வெங்கடேச பெருமாளை கண்டித்து உள்ளார். இந்த முன்வி ரோதத்தில் செல்லூர் பாலம் ஸ்டேசன் ரோடு அருகே பெட்ரோல் பங்க் அருகே சென்ற அருண்கு மாரை வழிமறித்து ஆபாசமாக பேசிய வெங்கடேச பெருமாள் அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில படுகாய மடைந்த அருண்குமாரை மதுரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து அருண்குமாரின் தந்தை வேல்முருகன் செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் வெங்க டேச பெருமாளை கைது செய்தனர்.

Tags:    

Similar News