உள்ளூர் செய்திகள்

ஒரு கிலோ தக்காளி விலை ரூ.110

Published On 2023-06-26 13:59 IST   |   Update On 2023-06-26 13:59:00 IST
  • ஒரு கிலோ தக்காளி விலை ரூ.110ஆக உயர்ந்துள்ளது.
  • விலை உயர்ந்துள்ளதால் பொது மக்கள் கவலையடைந்துள்ளனர்.

மதுரை

மதுரையில் தக்காளி, மிளகாய், முருங்கைக்காய், கேரட் பீன்ஸ், உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி யில் ஒருங்கிணைந்த காய்கறி வணிக வளாகம் அமைந்துள் ளது. தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்கு காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளும் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை நேரடியாக இங்கு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் தற்போது சமையலில் அத்தியா வசியமாக பயன்படுத்தப் படும் தக்காளியின் விலை ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ. 110 ஆக அதிகரித்துள்ளது. கிலோ ரூ. 60-க்கு விற்ற மிளகாய் ரூ.160 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் முருங்கைக்காய் கிலோ ரூ.50, கேரட் கிலோ ரூ.60, முருங்கை பீன்ஸ் கிலோ ரூ.120, பட்டர் பீன்ஸ் கிலோ ரூ. 120, சோயா பீன்ஸ் கிலோ ரூ.120, முட்டைக்கோஸ் ரூ.25, பூண்டு கிலோ ரூ.210, உருளைக்கிழங்கு கிலோ ரூ.70, பீட்ரூட் கிலோ ரூ. 60 ஆகிய விலைகளில் விற்கப் படுகிறது.

சமையலில் அதிகமாக பயன்படுத்தப்படும் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதால் பொது மக்கள் கவலையடைந்துள்ளனர்.

Tags:    

Similar News