வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது
- திருப்பரங்குன்றத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.200-ஐ பறித்து சென்று விட்டனர்.
மதுரை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கோடாங்கி தோப்பு 2-வது தெருவை சேர்ந்தவர் ராஜு (வயது48).இவர் பெரியரத வீதி முஸ்லீம் பேட்டை அருகில் சென்ற போது 3 பேர் கும்பல் அவரை வழிமறித்தனர்.பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.200-ஐ பறித்து சென்று விட்டனர்.
இது குறித்து ராஜு திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட கும்பல் குறித்து விசாரணை செய்தனர். இதில் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் கோட்டை தெருவை சேர்ந்த சேது மகன் சரத்குமார் (28), கோடாங்கி தோப்புவை சேர்ந்த நாகராஜ் மகன் அரவிந்தன் (23), திருப்பரங்குன்றம் பைக்காராவை சேர்ந்த முருகேசன் மகன் அழகு சுந்தரம் (23) என்று தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்கள் வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.