உள்ளூர் செய்திகள்

கைதி உள்பட 3 பேர் சாவு

Published On 2023-07-12 08:28 GMT   |   Update On 2023-07-12 08:28 GMT
  • கைதி உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
  • சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ரிசர்வ் லைனை சேர்ந்தவர் செல்வம் (வயது68). இவர் 2023-ம் ஆண்டு குற்ற வழக்கில் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது.

அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வம் (தண்டனை கைதி) உயிரிழந்தார். இது குறித்து சிறை அதிகாரி முனீஸ் திவாகர் மருத்துவமனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பசுமலை டாக்டர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சுஜிதா (35). இவர் திருநகரில் உள்ள இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் பணியில் இருந்த போது திடீரென்று மயங்கி விழுந்தார்.

அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுஜிதா பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவருடைய கணவர் ஆறுமுகம் திருநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதூர் ஆத்திகுளம் வண்டி பாதை ரோட்டை சேர்ந்தவர் சிவசங்கர் (56). இவர் மேல கோபுரம் அருகே வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தார். இந்த நிலையில் அவர் தங்கியிருந்த அறையை நீண்ட நேரம் திறக்காமல் இருந்தது.

இதுகுறித்து திலகர்திடல் போலீஸ் நிலையத்திற்கு மேன்சன் மேலாளர் சேகர் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கதவை உடைத்து பார்த்தனர். அப்போது சிவசங்கர் பிணமாக கிடந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திலகர் திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசங்கரின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News