உள்ளூர் செய்திகள்

வாலிபர்கள் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2023-04-12 15:31 IST   |   Update On 2023-04-12 15:31:00 IST
  • 2 வாலிபர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
  • தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

மதுரை தெற்குவெளி வீதி மீனா லூர்தீன் பள்ளிவாசல் சந்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் சரவணதீபக் (21). இவர் கடந்த சில நாட்களாக மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சரவண தீபக்கின் தாய் வசந்தி தெற்கு வாசல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவண தீபக் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கே.கே. நகர் மல்லிகை குடியிருப்பை சேர்ந்தவர் உதய பாரத் (21). சில நாட்களாக மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அண்ணா நகர் போலீசில் உதய பாரத்தின் தாய் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News