உள்ளூர் செய்திகள்

கோவையில் காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை

Published On 2022-11-15 14:55 IST   |   Update On 2022-11-15 14:55:00 IST
  • கடந்த 2 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்
  • கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது

கோவை,

கோவை துடியலூரை அடுத்த வெள்ளகிணர் பகுதியை சேர்ந்தவர் சங்கர் குரு (வயது 32). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கிருஷ்ணவேனி (30).

இவர்கள் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் சங்கர் குருவிற்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் சங்கர் குரு மனவேதனையுடன் இருந்து வந்தார். நேற்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை கஸ்தூரி நாயக்கன்பாளையம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் லோகநாதன் (46), டெய்லர். இவரது மனைவி மகேஷ்வரி. இவர் தினமும் தனது குழந்தைகளை அருகே உள்ள பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு தனது சகோதரரின் ஓட்டலுக்கு வேலைக்கு செல்வது வழக்கம்.

இதேபோன்று, சம்பவத்தன்று மகேஷ்வரி வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது, வீட்டில் தனியாக இருந்த லோகநாதன் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவலை அறிந்த போலீசார் சம்பவயிடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News