உள்ளூர் செய்திகள்

காதல் தோல்வியால் சினிமா கேமராமேன் தற்கொலை

Published On 2022-12-15 10:31 GMT   |   Update On 2022-12-15 10:31 GMT
  • வாடகை வீட்டில் நண்பர்கள் 2 பேருடன் தங்கி சினிமாத்துறையில் உதவி கேமராமேனாக ராஜீவ்காந்தி வேலை பார்த்து வந்தார்.
  • ராஜீவ்காந்தியின் அறையில் இருந்து கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர்.

போரூர்:

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (வயது36). இவர் வடபழனி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள வாடகை வீட்டில் நண்பர்கள் 2 பேருடன் தங்கி சினிமாத்துறையில் உதவி கேமராமேனாக வேலை பார்த்து வந்தார்.

ராஜீவ்காந்தி இளம்பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும் ஆனால் அவரது காதலை இளம்பெண் ஏற்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மன வேதனை அடைந்த ராஜீவ்காந்தி கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே தினசரி மது குடித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை நண்பர்கள் இருவரும் வழக்கம் போல வேலைக்கு சென்றுவிட்டனர்.

இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்து ராஜீவ் காந்தி திடீரென மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் வடபழனி இன்ஸ்பெக்டர் ஆனந்த்பாபு மற்றும் போலீசார் விரைந்து வந்து ராஜீவ்காந்தியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ராஜீவ்காந்தியின் அறையில் இருந்து கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அதில் "எனது சாவுக்கு வேறு யாரும் காரணம் இல்லை காதல் தோல்வியால் மன உளைச்சலில் அதிகமான குடிபோதைக்கு அடிமையானதால் இந்த முடிவை எடுத்துள்ளேன்" என்று எழுதப்பட்டு இருந்தது.

அவரது தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News