உள்ளூர் செய்திகள்

கோவையில் கால்நடை ஆய்வாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

Published On 2023-10-12 14:41 IST   |   Update On 2023-10-12 14:41:00 IST
  • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை
  • கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த பலர் பங்கேற்பு

கோவை,

கோவை சிவானந்தா காலனி அருகே கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.கால்நடை ஆய்வாளர் உள்பட காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News