உள்ளூர் செய்திகள்
வேப்பூர் அருகே மது விற்றவர் கைது
- வேப்பூர் அருகே மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- 97 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கடலூர்:
வேப்பூர் அருகே நல்லூர் கிராமத்திலுள்ள அரசு அனுமதி பெற்ற பாரில், திருட்டுத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், திருட்டு தனமாக விற்பனைக்கு வைத்திருந்த 97 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து, பார் உரிமையாளர் வேப்பூர் அடுத்த இலங்கியனூரைச் சேர்ந்த ராஜா, என்பவரை கைது செய்தனர்.