உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே சாராயம் விற்றவர் கைது

Published On 2022-12-23 14:32 IST   |   Update On 2022-12-23 14:32:00 IST
  • சங்கராபுரம் அருகே சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
  • 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி:

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் தியாகராஜபுரம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்துகொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த மொட்டையம்மாள் (வயது 60) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News