உள்ளூர் செய்திகள்
சங்கராபுரம் அருகே சாராயம் விற்றவர் கைது
சங்கராபுரம் அருகே சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கொசப்பாடி ஏரிக்கரை வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்த போது லாரி டியூப்பில் 55 லிட்டர் சாராயம் வைத்திருந்தார். விசாரணையில் அவர், புதுப்பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்த சக்திவேல்(23) என்பதும், சாராயத்தை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சக்திவேலை கைது செய்து அவரிடம் இருந்த சாராயத்தை பறிமுதல் செய்தனர்.