உள்ளூர் செய்திகள்

சாராயம் விற்றவர் கைது

Published On 2023-04-18 12:54 IST   |   Update On 2023-04-18 12:54:00 IST
  • கீழ்வேளூர் அருகே கோகூர் ஊராட்சியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
  • 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

நாகப்பட்டினம்:

கீழ்வேளூர் அருகே கோகூர் ஊராட்சியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கோகூர் மாதா கோவில் அருகே வெட்டாறு பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்றுகொண்டிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் நாகூர் வண்ணான் குளம் வடகரை பகுதியை சேர்ந்த வெற்றிவேல் (வயது 38) என்பதும், அவர் சாராயம் விற்றதும் தெரியவந்தது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த கீழ்வேளூர் போலீசார் வெற்றிவேலை கைது செய்து, அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News