உள்ளூர் செய்திகள்

மது விற்றவர் கைது

Published On 2022-10-06 08:06 GMT   |   Update On 2022-10-06 08:06 GMT
  • சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் திருமருகல் அருகே கீழசன்னாநல்லூரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
  • காரைக்கால் பகுதியிலிருந்து மதுபானம் கடத்தி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது.

நாகப்பட்டினம்:

திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் ரவி மற்றும் போலீசார் திருமருகல் அருகே கீழசன்னா நல்லூரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கீழசன்னா நல்லூர் அருகே திருட்டுத னமாக மதுபானம் விற்ற கீழசன்னாநல்லூர் ஜீவா நகரை சேர்ந்த நாடிமுத்து (வயது 43) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர் காரைக்கால் பகுதியில் இருந்து மதுபானம் கடத்தி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 110 லிட்டர் மதுபானத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News