உள்ளூர் செய்திகள்

சக்தி காளியம்மன் கோவிலில் விளக்கு பூஜை நடந்தது.

வைரவன்காடு சக்தி காளியம்மன் கோவிலில் விளக்கு பூஜை

Published On 2023-05-27 09:22 GMT   |   Update On 2023-05-27 09:22 GMT
  • அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
  • ஏராளமான பெண்கள் குத்து விளக்கை அம்பாளாக பாவித்து குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அருகே உள்ள காமேஸ்வரம் வைரவன்காடு சர்வ சக்தி காளியம்மன் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் நடை பெறும் வைகாசி உற்சவ திருவிழாவின்முக்கிய நிகழ்ச்சியான 108 விளக்கு பூஜை நடைபெற்றது.

முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர் ,சந்தனம் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராத னைகள் நடைபெற்றது.

தொடர்ந்து ஏராளமான பெண்கள் சுமங்கலிகள் குத்து விளக்கை அம்பா ளாக பாவித்து குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.

அதைத் தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பி க்கப்பட்டது.

ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News