உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் குளத்தில் விழுந்து தொழிலாளி பலி

Published On 2022-09-30 08:22 GMT   |   Update On 2022-09-30 08:22 GMT
  • தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள துப்பார்பட்டியை சேர்ந்தவர் பரமசிவன் (வயது59). கூலி தொழிலாளி.
  • பரமசிவன் நேற்று காலை குளித்துவிட்டு வருவதாக அப்பகுதியில் உள்ள குளத்திற்கு சென்றார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள துப்பார்பட்டியை சேர்ந்தவர் பரமசிவன் (வயது59). கூலி தொழிலாளி. இவரது மனைவி கிருஷ்ணம்மாள். இவர்களுக்கு மகன் மற்றும் மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் பரமசிவன் நேற்று காலை குளித்துவிட்டு வருவதாக அப்பகுதியில் உள்ள குளத்திற்கு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரை தேடி சென்றனர். அப்போது குளத்து தண்ணீரில் பரமசிவன் மிதந்தபடி இறந்து கிடந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பரமசிவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக தூத்துக்குடி அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக போலீ சார் வழக்குப் பதிவு செய்து அவர் எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News