உள்ளூர் செய்திகள்

தொழிலாளி கொலை: 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை

Published On 2022-10-09 08:41 GMT   |   Update On 2022-10-09 08:41 GMT
  • சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கோபாலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 55), கூலி தொழிலாளி.
  • சந்தேகத்தின்பேரில் அப்பகுதியை சேர்ந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கோபாலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 55), கூலி தொழிலாளி. இவர் கடந்த 6-ந்தேதி மொபட்டில் வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை.

நேற்று முன்தினம் கருத்தராஜாபாளையம் துணை மின் நிலையம் அருகில் உள்ள விவசாய தோட்ட வேலி பகுதியில் முருகேசன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இந்த சம்பவம் குறித்து மல்லியகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை கைது செய்ய ஆத்தூர் டி.எஸ்.பி. ராமச்சந்திரன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார், சந்தேகத்தின்பேரில் அப்பகுதியை சேர்ந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை யார் செய்தார்? கொலைக்கான காரணம் என்ன ? என பல்வேறு கேள்விகள் கேட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News