உள்ளூர் செய்திகள்

கூலி தொழிலாளி தற்கொலை

Published On 2022-07-10 13:36 IST   |   Update On 2022-07-10 13:36:00 IST
  • திடீரென மாரடைப்பால் இறந்துவிட்டார்.
  • இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி,

தேன்கனிக்கோட்டை அருகே பேச்சப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஆஞ்செயன் (32). கூலி தொழிலாளி. இவரது தந்தை திடீரென மாரடைப்பால் இறந்துவிட்டார். இதில் விரக்தியடைந்த ஆஞ்செயன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News