உள்ளூர் செய்திகள்

திருநாவலூர் அருகே சாலை விபத்தில் தொழிலாளி பலி

Published On 2023-02-18 14:34 IST   |   Update On 2023-02-18 15:45:00 IST
சென்னையில் இருந்து ஏற்காட்டுக்குச் சென்ற கார் இவர்கள் மீது மோதியது. இதில் உத்திராணம் சம்பவ இடத்தில் உயிரிழந்தார் வெங்கடேசன் பலத்த காய மடைந்தார்

கள்ளக்குறிச்சி :

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா ஆர்.ஆர். குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெங்க டேசன், அவருடைய நண்பர் உத்திராணம். இருவரும் உளுந்தூர்பேட்டைக்கு சொந்த வேலையாக சென்று மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர். அப்போது சென்னையில் இருந்து ஏற்காட்டுக்குச் சென்ற கார் இவர்கள் மீது மோதியது. இதில் உத்திராணம் சம்பவ இடத்தில் உயிரிழந்தார் வெங்கடேசன் பலத்த காய மடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கிருந்த உத்தி ரானம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாய மடைந்த வெங்கடேசனை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை கைப்பற்றி, தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News