உள்ளூர் செய்திகள்
- கார் எதிர்பாராதவிதமாக மோதியதில் சேட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஜே.ஆர். நகரை சேர்ந்தவர் சேட்டு (வயது50). கூலி தொழிலாளியான இவர் நேற்றிரவு திருவண்ணாமலை- பெங்களூரு சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மோதியதில் சேட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.