உள்ளூர் செய்திகள்

கார் மோதி கூலி தொழிலாளி பலி

Published On 2023-05-11 15:04 IST   |   Update On 2023-05-11 15:04:00 IST
  • கார் எதிர்பாராதவிதமாக மோதியதில் சேட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
  • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஜே.ஆர். நகரை சேர்ந்தவர் சேட்டு (வயது50). கூலி தொழிலாளியான இவர் நேற்றிரவு திருவண்ணாமலை- பெங்களூரு சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மோதியதில் சேட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News