உள்ளூர் செய்திகள்
மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி தொழிலாளி பலி
- ஓசூர் - மாலூர் சாலையில் உளியாளம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார்.
- பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
ஓசூர்,
தருமபுரிமாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள ஈச்சம்பாடி கீழ் தெருவை சேர்ந்தவர் ராஜா கிருஷ்ணன் (வயது 36). கூலித் தொழிலாளி.
இவர் கடந்த 1-ந் தேதி மோட்டார்சைக்கிளில் ஓசூர் - மாலூர் சாலையில் உளியாளம் பஸ் நிறுத்தம் பக்கமாக சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி ராஜா கிருஷ்ணன் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே
பலியானார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பாகலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.