கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விதிகளை மீறும் உர விற்பனை நிலையங்களின் மீது தொடர் நடவடிக்கை பாயும் -வேளாண்மை உதவி இயக்குநர் எச்சரிக்கை
- அதிக அளவில் யூரியா விற்பனை செய்த சில்லரை உர விற்பனையாளர்கள் விபரம் சேகரிக்கப்படுகிறது.
- 19 சில்லரை உரக்கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) அறிவழகன் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு:-
சென்னை வேளாண்மை இயக்குநர் அறிவுரை களின்படி, கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து காரீப் மற்றும் ராபி பருவங்களில் மாதந்தோறும் ஒரே நபருக்கு அதிக அளவில் யூரியா விற்பனை செய்த சில்லரை உர விற்பனையாளர்கள் விபரம் சேகரிக்கப்படுகிறது.
அதன்படி, யூரியா ரசாயன உரத்தின் பயன்பாட்டை குறைக்கவும், மண் வளத்கை பாதுகாக்கவும் மற்றும் யூரியா, ரசாயன உரம் விவசாயம் தவிர பிற பயன்பாட்டிற்கு பயன்படுத்தபடாமல் இருக்கவும், வேளாண்மை துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடப்பு ஆண்டு காரீப் பருவத்தில் (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) மாதந்தோறும் ஒரே விவசாயிக்கு அதிகப்படி யான யூரியா உரங்களை விற்பனை செய்த 19 சில்லரை உரக்கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனவே, விதிகளை மீறும் உர விற்பனை நிலையங்களின் மீது தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்படு கிறது.
இவ்வாறு தனது செய்திக் குறிப்பில் வேளாண்மை உதவி இயக்குநர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) அறிவழகன் தெரிவித்துள்ளார்.