உள்ளூர் செய்திகள்

கேபி முனுசாமி

அப்படி என்ன அவருக்கு முக்கியத்துவம்...?

Published On 2022-10-15 10:31 GMT   |   Update On 2022-10-15 10:31 GMT
  • கே.பி.முனுசாமி மறுத்தாலும் பத்து நாட்களுக்கும் மேலாக ஒதுங்கி இருக்கிறார் என்பது மட்டும் உண்மை.
  • சீனியர் என்பதால் கொஞ்சம் முரண்டு பிடித்தால் தேடி வருவார்கள் என்று முனுசாமி நினைத்திருக்கிறார்.

அரசியல் களத்தில் கடந்த சில நாட்களாக புகைந்து கொண்டிருப்பது கே.பி.முனுசாமி அந்தப் பக்கத்தில் இருந்து இந்தப் பக்கம் (ஓ.பி.எஸ்) பக்கம் வரப்போகிறார் என்பதுதான்.

உண்மையில்லை என்று கே.பி.முனுசாமி மறுத்தாலும் பத்து நாட்களுக்கும் மேலாக ஒதுங்கி இருக்கிறார் என்பது மட்டும் உண்மை.

இப்படி திடீரென்று புகைவதற்கு காரணம் சி.வி.சண்முகத்துடன் ஏற்பட்ட புகைச்சல் தானாம். பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்தை நீக்குவதற்கான தீர்மானத்தை சி.வி.சண்முகம் வாசிக்க தயாராக இருந்த நிலையில் கே.பி.முனுசாமி வாசித்து விட்டார். அன்று தொடங்கிய பிரச்சினைதான். இதுவரை அவர்கள் ராசியாகவில்லை.

அதன்பிறகு அடுத்தடுத்து நடந்த சில நிகழ்ச்சிகளிலும் எடப்பாடி பழனிசாமி சி.வி.சண்முகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தது முனுசாமியை முணுமுணுக்க வைத்திருக்கிறது.

சீனியர் என்பதால் கொஞ்சம் முரண்டு பிடித்தால் தேடி வருவார்கள் என்று முனுசாமி நினைத்திருக்கிறார். ஆனால் 'கொஞ்சம் விட்டுப்பிடிப்போம்' என்று எடப்பாடி பழனிசாமியும் இருந்து விட்டார்.

சி.வி.சண்முகம் தாராளமாக மடியை அவிழ்க்கிறார். ஆனால் கே.பி.முனுசாமி துட்டு அவிழ்க்க யோசிக்கிறார். அப்போ இ.பி.எஸ். இப்படித்தானே இருப்பார் என்று கட்சிக்காரர்கள் வெளிப்படையாகவே கமெண்ட் அடிக்கிறார்கள்.

Tags:    

Similar News