உள்ளூர் செய்திகள்

பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

Published On 2023-06-01 07:48 GMT   |   Update On 2023-06-01 07:48 GMT
  • பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
  • மலர்கள் மற்றும் துளசியால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

கரூர்:

நொய்யல் அருகே கோம்புப்பாளையத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாசபெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள்உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தோட்டக்குறிச்சி சேங்கல்மலை வரதராஜ் பெருமள் கோவிலில் சுவாமிக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியகளால், அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசியால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

Tags:    

Similar News