உள்ளூர் செய்திகள்
காணாமல்போன 131 செல்போன்கள் கண்டுபிடிப்பு
- காணாமல்போன 131 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது
- ஏமாந்தவர்களின் பணம் ரூ.2,46,100 மீட்டுள்ளனர்
கரூர்:
கரூர் மாவட்டத்தில் செல்போன்கள் காணாமல் போனதாக பொதுமக்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் ரூ.26 லட்சம் மதிப்புள்ள 131 போன்களை கரூர் மாவட்ட சைபர் க்ரைம் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். மேலும் செல்போனில் வரும் லிங்க், யூடியூப் விளம்பரம், ஆன்லைன் மூலம் நடந்த மோசடிகளில் ஏமாந்தவர்களின் பணம் ரூ.2,46,100 மீட்டுள்ளனர். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி. சுந்தரவதனம் சம்பந்தப்பட்டவர்களிடம் செல்போன்கள் மற்றும் தொகையை இன்று (ஆக. 30) காலை 11 மணிக்கு உரியவர்களிடம் ஒப்படைக்கிறார்.