உள்ளூர் செய்திகள்

அஞ்சலக ஊழியர்களுக்கு பரிசு

Published On 2022-10-09 12:13 IST   |   Update On 2022-10-09 12:13:00 IST
  • அஞ்சலக ஊழியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
  • சிறப்பாக பணியாற்றிதற்காக வழங்கப்பட்டது

கரூர்:

அரவக்குறிச்சி உட்கோட்ட அஞ்சலகங்களில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு பரிசளிப்பு விழா சவுந்திராபு ரத்தில் நடந்தது. விழாவுக்கு ஆய்வாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கரூர் அஞ்சலக கோட்ட கண் காணிப்பாளர் சிவகுமார் பங்கேற்றார். இதில் பள்ளப்பட்டி, சின்னதாராபுரம், க.பரமத்தி, தென்னிலை, வெள்ளியணை, ஈசநத்தம், மூலப்பட்டி உள்ளிட்ட தபால் நிலையங்களில், 2021-22ம் நிதியாண்டில் சேமிப்பு கணக்குகள், தபால் பட்டுவாடா, செல்வமகள் சேமிப்பு திட்டம், கிராமிய அஞ்சல் காப்பீடு போன்ற திட்டங்களில் அதிக கணகக்குகளை துவங்கிய துணை அஞ்சல் அலுவலர்கள் மற்றும் கிராமப்புற அஞ்சலக ஊழியர்களுக்கு அஞ்சலக ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், வெரிச்சினம்பட்டி கிளை அஞ்சலக அலுவலர் சக்திவேல், பள்ளப்பட்டி அஞ்சலக துணை அலுவலர் மனோ உள்ளிட்ட அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News