உள்ளூர் செய்திகள்
போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி
- போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி தொடங்கபட உள்ளது
- இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள வருகிற 20-ந் தேதிக்குள் மாணவர்கள் தங்களின் விபரங்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்
கரூர்,
கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுகளாகிய மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி), ெரயில்வே தேர்வு குழுமம் (ஆர்.பி.ஐ), வங்கி பணியாளர் தேர்வு குழுமம் (ஐ.பி.பி.எஸ்) உள்ளிட்ட தேர்வுகளை எழுதி வெற்றி பெற வசதியாக இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள வருகிற 20-ந் தேதிக்குள் மாணவர்கள் தங்களின் விபரங்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சி வகுப்புகள் வருகிற 25-ம்தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகளில் அரசு பணிக்கு தயாராகி வரும் இளைஞர்கள் குறிப்பிட்ட இணையதளத்தில் முன்பதிவு செய்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.