உள்ளூர் செய்திகள்

சுவாமிமலை கோவிலில் கார்த்திகை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் கார்த்திகை திருவிழா கொடியேற்றம்

Published On 2023-11-18 10:11 GMT   |   Update On 2023-11-18 10:11 GMT
  • விழாவானது வருகின்ற 28-ந் தேதி வரை 12 நாட்கள் நடைபெற உள்ளது.
  • இரவு தங்கமயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும் தீபக்காட்சியும் நடைபெற உள்ளது.

சுவாமிமலை:

அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகின்ற 28-ந் தேதி வரை 12 நாட்கள் விழா நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு இன்று காலை 10.30 முதல் 12 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி பரிவாரங்களுடன் படி இறங்கி உற்சவ மண்டபம் எழுந்தருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு யாகசாலை பூஜையுடன் சுவாமி திருவீதி உலா திக்பந்தனம் நடைபெற உள்ளது. தொடர்ந்து தினமும் சுவாமி வீதியுலாவும், வருகிற 26 ஆம் தேதி திருக்கார்த்திகை முன்னிட்டு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், இரவு தங்கமயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும் தீபக்காட்சியும் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News