உள்ளூர் செய்திகள்

தொழிலதிபர் வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காரைக்கால் தொழிலதிபருக்கு பிரபல பெண் தாதா கொலை மிரட்டல் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

Published On 2023-08-21 07:22 GMT   |   Update On 2023-08-21 07:22 GMT
  • சிவகாளிமுத்து கடந்த 2020-ம் ஆண்டு திரு.பட்டினம் போலீசில் புகார் அளித்திருந்தனர்.
  • தாதா எழிலரசியை போலீ சார் கைது செய்தனர்.

புதுச்சேரி:

காரைக்கால் மாவட்ட பிரபல பெண் தாதா எழிலரசி, கடந்த 2019-ம் ஆண்டு வாஞ்சூர் பகுதியில் உள்ள மறைந்த தொழில் அதிபர் ராமுவின் முதல் மனைவி வினோதாவின் மகன்கன் அஜேஸ் ராமு, சிவகாளி முத்து ஆகியோ ருக்கு சொந்தமான மதுபான கடையை கூலிப்படை யினர் மூலம் தாக்குதல் நடத்தியது, அஜேஷ் ராம் மற்றும் சிவகாளி முத்துவை மிரட்டி மதுபான கடையை எழுதி வாங்கியது தொடர்பாக அஜேஷ் ராம் மற்றும் சிவகாளிமுத்து கடந்த 2020-ம் ஆண்டு திரு.பட்டினம் போலீசில் புகார் அளித்திருந்தனர்.

அதன் பேரில், பெண் தாதா எழிலரசியை போலீ சார் கைது செய்தனர். அதன் பிறகு ஜாமினில் வெளியே வந்த எழிலரசி, கடந்த சில தினங்களுக்கு முன்பு, கூலிப்படையினரை கொண்டு சிவகாளி முத்து வுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படு கிறது. இந்த கொலை மிரட்டல் தொடர்பாக சிவகாளிமுத்து அளித்த புகாரை தொடர்ந்து, திருப்பட்டினம் போலீசார், நிரவியில் உள்ள சிவகாளி முத்து வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் 2 பேர் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News