உள்ளூர் செய்திகள்

களியக்காவிளை அருகே அரசு பஸ் மீது லாரி மோதி விபத்து

Published On 2023-05-26 10:50 GMT   |   Update On 2023-05-26 10:50 GMT
  • ஒருவர் படுகாயம்
  • இந்த விபத்தில் அரசு பஸ் ஓட்டுநரும், பயணிகளும் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கன்னியாகுமரி:

திருநெல்வேலி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். லாரி டிரைவர். இவர் இன்று காலை திருவனந்தபுரத்தில் இருந்து திருநெல்வேலி நோக்கி லாரியில் சென்றுக்கொண்டிருந்தார்.

களியக்காவிளை அருகே பி.பி.எம். சந்திப்பில் அவர் வந்தபோது அவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற அரசு பஸ்சின் மீது பயங்கரமாக மோதியது. இதில் அரசு பஸ்சின் முன் பக்க கண்ணாடி முற்றுலுமாக நொறுங்கியது.

இந்த விபத்தில் அரசு பஸ் ஓட்டுநரும், பயணிகளும் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். லாரி டிரைவர் படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News