உள்ளூர் செய்திகள்

திங்கள் நகரில் இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

Published On 2023-08-08 07:27 GMT   |   Update On 2023-08-08 07:27 GMT
  • அஸ்வத்தாமன் மீது பொய் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்த காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
  • போராட்டத்தில் காவல்துறையை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

கன்னியாகுமரி :

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச் செயலாளர் அஸ்வத்தாமன் மீது பொய் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்த காவல்துறையை கண்டித்து குளச்சல் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பாக திங்கள் நகர் பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குளச்சல் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜேக்கப் தலைமை தாங்கினார். ஐ.என். டி.சி.யு. மாவட்ட பொதுச் செயலாளர் ஜான் மில்டன் கண்டன உரை ஆற்றினார்.

முன்னாள் திங்கள் நகர் பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேவதாசன், திங்கள் நகர் பேரூராட்சி துணைத் தலைவர் ரீத்தாம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பொய் வழக்கை பதிவு செய்த காவல்துறையை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

Tags:    

Similar News