உள்ளூர் செய்திகள்

இளம்பெண் திடீர் மாயம்

Published On 2023-09-06 13:41 IST   |   Update On 2023-09-06 13:41:00 IST
  • திருமணமானதில் இருந்தே இவர்களுக்குக்குள் பிரச்சினை இருந்து வருவதாக தெரிகிறது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து கேரளாவில் சுற்றித்திரியும் அபிஷாவை தேடி வருகின்றனர்.

இரணியல் :

இரணியல் அருகே குருந்தன்கோட்டை அடுத்த முக்கலம்பாடை பகுதியைச் சேர்ந்தவர் வினோத் ஜாண் (வயது 35). தக்கலை அருகே காப்பீடு முகவராக பணி புரிந்து வருகிறார். இவர் செட்டிச் சார் விளையை சேர்ந்த சுந்தர்ராஜ் மகள் அபிஷா என்பரை கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணமானதில் இருந்தே இவர்களுக்குக்குள் பிரச்சினை இருந்து வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த மாதம் 25-ந்தேதி அபிஷாவை திடீெரன காணவில்லை. வீட்டு பீரோ வில் இருந்த வினோத்ஜாண் தாயின் 18½ பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணத்தை யும் அவர் எடுத்து சென்று விட்டதாகவும் தெரிகிறது. இதனிடையே அபிஷா ஆகஸ்ட் 28-ந்தேதி கோட்ட யத்தில் சுற்றி திரிவதாக வினோத்ஜா ணுக்கு தகவல் கிடைத்தது.

நகைகள் மற்றும் பணத்துடன் அபிஷா மாயமானது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் வினோத்ஜாண் புகார் தெரிவித்தார். ஆனால் அபிஷாவை இது வரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கேரளாவில் சுற்றித்திரியும் அபிஷாவை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News