உள்ளூர் செய்திகள்

நாகரில் வாலிபர் குத்திகொலை - பழிக்கு பழியாக என்னை கொல்ல வந்ததால் நான் முந்திக் கொண்டேன்

Published On 2023-08-30 11:59 IST   |   Update On 2023-08-30 11:59:00 IST
  • நண்பரை கொன்றவர் வாக்குமூலம்
  • இசக்கி முத்து மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

நாகர்கோவில்,ஆக.30-நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் குமார்(22). இவர் தொழில்நுட்ப பயிற்சி முடித்துவிட்டு வெளிநாடு செல்ல தயாரானார்.

இந்த நிலையில் இவருக்கும் இவரது நண்பராக இருந்த அதே பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து(25) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். மேலும் ஆத்திரம் அடைந்த இசக்கிமுத்து ஸ்க்ரூ டிரைவரால் மனோஜ் குமாரின் கழுத்தில் குத்தினார்.

படுகாயம் அடைந்த மனோஜ்குமாரை நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மனோஜ் குமார் பரிதாபமாக இறந்தார்.இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து அவரது சகோதரர் கொடுத்த புகாரின் பேரில் இசக்கி முத்து மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

சாத்தான்குளம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற இசக்கி முத்துவை வடசேரி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இசக்கிமுத்துவை போலீசார் வடசேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர் கூறுகையில். கடந்த தீபாவளி தினத்தன்று மதுபோதையில் எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனோஜ் குமார் காயம் அடைந்தார். பின்னர் எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.நான் மனோஜ் குமாரை தாக்கியதால் அவரை என்னை பழிவாங்க காத்திருந்தார்.சம்பவத்தன்று மனோஜ் குமார் கத்தியுடன் என்னை தாக்க வந்தார்.

நான் அவரை கையில் இருந்த ஸ்குருடிரை வால்குத்தினேன் என்றார்.இதையடுத்து போலீசார் இசக்கி முத்துவை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News